லிப்ட் கேட்டு கொடுக்காததால் பைக் ஓட்டிவந்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!!
horrific incident to bike owners
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், தட்சணமூர்த்தி வழக்கம் போல் தனது வேலையே முடித்துவிட்டு தனது இல்லத்திற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் தட்சணமூர்த்தி வரும் வழியில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர், தங்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று மின்னல் கிராமத்தில் இறக்கிவிடும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு தட்சணமூர்த்தி மறுப்பு தெரிவித்த தட்சணாமூர்த்தி, கத்தியால் குத்தி தலை மீது கல்லை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து தட்சணாமூர்த்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் கொண்டு செல்லும் வழியில் தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.
இதை அறிந்த தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த வேலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உருதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்
English Summary
horrific incident to bike owners