காதல் கணவரை கரம்பிடிக்க போராட்டம்.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் எடப்பாடி வெள்ளந்திவலசு பகுதியை சார்ந்தவர் சவுந்தர ராஜன். திருநெல்வேலி மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர் ஷீலா.  ஷீலா துணை நடிகையாக பணியாற்றி வரும் நிலையில், மும்பையில் வசித்து வருகிறார். 

ஷீலாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ளார். இந்த நிலையில், இணையத்தளம் வாயிலாக ஷீலாவிற்கும் - சேலம் சவுந்தராஜனிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே, கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டுள்ளனர். 

இதனை சாதகமாக மாற்றி கொண்ட சவுந்தரராஜனின் பெற்றோர் ஷீலாவிடம் இருந்து கணவரை பிரிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக எடப்பாடி காவல் நிலையத்தில் பெண்மணி புகார் அளித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindi Serial Actress Sheela Complaint Edappadi Police Station


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->