தமிழகத்தின் அந்த பகுதியில் மட்டும் கொட்டி தீர்க்கும் கனமழை.!
heavy rain in naagai
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் அடுத்தடுத்து வந்த இரண்டு புயல்கள் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பிரதான ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழைப்பொழிவு இல்லாமல் வறண்ட வானிலை நிலை வந்த நிலையில் இன்று மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மற்றும் இலங்கையை ஒட்டிய நிலவு வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியால் அதிகாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 51 மி.மீட்டரும், தலைஞாயிறில் 40 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.