குற்றாலம், சுருளி அருவிகளில் விதிக்கப்பட்ட முக்கிய தடை!!
heavy rain in kutralam
நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து. வந்தனர். ஆனால் இன்று காலை பெய்த கனமழையால், குற்றாலம் மெயின் அருவியில் ஆக்ரோஷத்துடன் நீர் கொட்டி வருகிறது.
தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கவே மெயின் அருவியில், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். இதையடுத்து மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதை அடுத்து ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அருவிகளை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதே போன்று, தேனி மாவட்டதிலுள்ள சுருளி அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கெனவே ஐந்து நாட்களுக்கு தடை அமலில் இருந்த நிலையில். நேற்று முதல் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவி வெறிச்சோடிக் காணப்படுகிறது.