15 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை., வானிலை மையம் தகவல்.!
heavy rain 17 district in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நான்கு நாட்களுக்கு முன் தொடங்கியது, இதன் காரணமாக சென்னை, தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
இந்தநிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று அதிகாலை முதலே சென்னை பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. வடபழனி , கிண்டி,வேளச்சேரிதியாகராயநகர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான போடி, கோடாங்கிபட்டி, முந்தல், குரங்கணி, தேவாரம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர் மழை காரணமாகஅந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, விழுப்புரம், கடலூர், நாகை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதற்கிடையே , குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இலங்கை கடற் பகுதிகளில்ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில்கன முதல் மிக கனமழை பெய்யக்கூடு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
English Summary
heavy rain 17 district in tamilnadu