வேலூர் || ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டிய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்..!
Headmaster Suspend Who provoke the Teacher to suicide
ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தலைமயாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், நெல்லூர்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவர் அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளி கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தலைமையாசிரியர் ஏற்படுத்திய மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அவரது மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்த வந்த மாணவர்கள் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து, தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
English Summary
Headmaster Suspend Who provoke the Teacher to suicide