சுர்ஜித் மீண்டு வரும் நாளே தீபஒளித் திருநாள்..! ஹர்பஜன் சிங் ட்விட்..!!
harbhajan singh twit about child surjith
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது 2 வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், சுஜித்தை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதெற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் மூலமாக குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது.
அடுத்தடுத்த அணைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில்., நேற்று அதிகாலை 5 மணிக்குமேல் சிறுவனின் குரல் கேட்கவில்லை. மேலும்., தற்போது சிறுவன் 82 அடி ஆழத்தில் சிக்கியுள்ள நிலையில்., நேற்று மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், அண்ணா பல்கலைக்கழக குழு., நெய்வேலி சுரங்க பொறியாளர்கள் மற்றும் பிற தன்னார்வாளர்கள் என அனைவரும் விரைந்துள்ளனர்.
சிறுவனை மீட்க 41 மணிநேரம் கடந்தும் தற்போது அனைவரும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில்., சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் போன்ற பல அரசு அதிகாரிகள் அருகில் இருந்து குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
சிறுவன் நல்ல நிலையில் மீண்டு வர தமிழகம் மட்டுமல்லாது இந்தியா - உலகம் என உலகளவில் சிறுவனிற்காக அனைவரும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில்., அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் தங்களின் பிரார்த்தனையை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இந்த தருணத்தில்., கடந்த சில மணிநேரத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது சிறுவன் நலமுடன் வர பிரார்த்திப்பதாகவும்., குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்., ஆழ்துளைக்கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் இனி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனைப்போன்று இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் சிறுவன் சுர்ஜித் மீண்டு வர பிரார்த்திப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
harbhajan singh twit about child surjith