மாற்றுத்திறனாளியான சிறுமி என்றும் பாராமல் ஆசிரியர் செய்த கொடூர செயல்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறைக்கு அருகே படிக்கவில்லை என்ற காரணத்திற்காக மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தார்கள்.

மயிலாடுதுறை கீழையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் பவித்ரா. 8 வயதான இவர், இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாத மாற்றுத்திறனாளி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பவித்ரா சரியா படிக்காததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் பாஸ்கர் கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியுள்ளார். காயமடைந்த மாணவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

handicap girl killed by teacher


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->