வேலூரில் இடி மின்னலுடன் பெய்த ஆலங்கட்டி மழை.. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!
hail storms at vellore
வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 6.30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து சிறிதுநேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இந்நிலையில், வேலூர் வேலப்பாடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகள் ஆலங்கட்டி மழையில் இறங்கி விளையாடினர்.வாகங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றன.