எல்லாம் ஏற்கனவே ரெடி., இதுக்கு தான காத்திருந்தோம்.! - எச்.ராஜா உற்சாகம்.!
h raja says about ayodhya case
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியது. இந்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் அளித்த பேட்டியில், "பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கானது முடிவிற்கு வந்து இருப்பது திருப்தியை ஏற்படுத்துகிறது. அனைத்து தரப்பினரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும்.
இந்த தீர்ப்பின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டமே வெற்றி பெற்று இருக்கின்றது. ராமஜென்ம பூமி பல போராட்டங்களை நிகழ்த்தி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.
ராமர்கோவில் அயோத்தியில் கட்டுவதற்காக சிற்பங்கள், தூண்கள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்கனவே தயாராக இருக்கின்றது. விரைவிலேயே ராமர் கோவில் கட்டப்படும்." என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
English Summary
h raja says about ayodhya case