சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கொத்தட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்(48). இவர் அதேபகுதியில் நடத்தி வரும் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கடையின் பின்புறம் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளரான துரைராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து துரைராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gutkha seller arrested in Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->