உடலில் நாய்கடியுடன் வயலில் பிணமாக இருந்த சிறுமி.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள மோசனா பகுதியை சார்ந்தவர் பிகா மிஸ்டரி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் முடியாத நிலையில், அகமதாபாத்தில் இருக்கும் சகோதரரின் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றியும் வருகிறார். 

இந்த நிலையில், இவரது வீட்டருகே இருக்கும் குடும்பத்தை சார்ந்த 7 வயது சிறுமி மாயமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக செப்டம்பர் 12 ஆம் தேதி, சிறுமியின் குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், உடலில் நாய்கடியுடன் வயலில் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த விசாரணையில், பிகா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்த விசாரணையில், கடந்த 12 ஆம் தேதி இரவு நேரத்தில் சிறுமியை ஆட்டோவில் ஏற்றி, வயல் வெளிக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு வைத்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் சிறுமி அலறியதால், சிறுமியை கொலை செய்து, உடலை அங்கயே போட்டுவிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Child girl kidnapped and Sexual Torture Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->