பணத்தை திரும்ப கேட்ட பாட்டி.. கொலை செய்ய முயன்ற பேரன்.. கோவை அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


பாட்டியின் கழுத்தை அறுத்து பெரும் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாக தெரிகிறது. இதனையடுத்து இவர்களிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மூதாட்டி வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளார்.

 வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்த கார்த்திக் பாட்டி வாங்கி கொடுத்த கடன்களைத் திருப்பிக் கொடுக்க இல்லை எனக் கூறப்படுகிறது. மூதாட்டி கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றுள்ளார். மூதாட்டின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grandson attempt kills his grand mother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->