திருவாரூர்: லைட் போட சென்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி..!
Grandmother killed by electric shock
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் , உத்தமதானபுரம் பகுதியில் வசித்து வருபவர் சிவசாமி. இவருடைய மனைவி மலர்க்கொடி (55). இவர்கள் தனியே வசித்து வருகின்றனர். இரவு வழக்கம் போல இரவு மின் விளக்கை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
அதில் படுகாயமடைந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மலர்கொடி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Grandmother killed by electric shock