சேமித்து வைத்த பணம் மொத்தமும் செல்லாமல் போனதே.. கதறும் வயதான சகோதரிகள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், திருப்பூர் மாவட்டத்தில் பூமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சகோதரிகள் ரங்கம்மாள்(75) மற்றும் தங்கம்மாள்(78) இவர்கள் இருவரும் தங்களது பேரன் பேத்திகளுக்காக வெகு காலமாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து வந்தார்கள்.

இந்த இரண்டு பாட்டிகளின் கணவர்களும் இறந்துவிட்டார், எனவே இருவரும் மகன்கள் வீட்டில் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் இவர்களின் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்குப் பணம் அதிகமாகத் தேவைப்பட்ட காரணத்தால், அவர்களது மகன்களிடம் பணம் இல்லாத சூழ்நிலையில் பாட்டிகளிடம் கேட்டிருக்கிறார்.

அப்போது, நாங்கள் நிறையப் பணம் சேர்த்து வைத்துள்ளோம் என்று கூறி அந்த பாட்டிகள் மொத்தமாக 46 ஆயிரம் பணத்தை மகன்கள் கையில் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த பணம் முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இந்த பணம் செல்லாது. இதனை எப்போதோ மாற்றி விட்டார்கள் என்று அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டிகள் பணம் செல்லாமல் அறிவிக்கப்பட்டது எங்களுக்குத் தெரியாது என்றும் இந்த பணத்தைப் பல ஆண்டுகளாகப் பேரன், பேத்திகளுக்குக் கொடுப்பதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்தோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grand women savings expired money for grand children


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->