பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா..! விபரீத முடிவு எடுத்த மருமகன்.. படுபயங்கர சம்பவம்.!
grand fa abusing grand child in ariyalur
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நமது நாட்டில் அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணமாக பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கடுமையான தண்டனைகள் இல்லை என்பதுதான் என்று கூறப்பட்டாலும், பாதிப்புகள் என்னவோ அதிகரித்து வந்து கொண்டே தான் இருக்கின்றது.
அரியலூர் மாவட்டம் அருகே பேத்திஇடமே மதுபோதையில் அத்துமீறிய தாத்தாவை அவருடைய மருமகன் அடித்தே கொன்றுள்ள சம்பவமானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
அரியலூர் மாவட்டம் கோவில் எசனை என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜுக்கு பாக்கியராஜ் என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். பாக்யராஜ் தன்னுடைய அக்கா மகளான கிரிஜாவையே திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தன்னுடைய மருமகளும் பேத்தியும் ஆன கிரிஜாவிடம் மதுபோதையில் அத்துமீறி இருக்கின்றார்.
இதைப்பார்த்த கிரிஜாவின் தந்தையும், செல்வராஜின் மருமகனான டிசோசா முங்கிலால் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்துள்ளார். இதன் காரணமாக செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
English Summary
grand fa abusing grand child in ariyalur