இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
gps in metro water lorry
மதுரை மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் 34 லாரி மற்றும் 25 டிராக்டர்களில் தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது
இந்தநிலையில், மதுரை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகிக்கும் வாகனங்கள் மக்களுக்கு தண்ணீர் வழங்காமல் திருட்டு திருட்டுத்தமாக தண்ணீரை வேறு எங்கோ சென்று விற்பதாக மக்களை மாநகராட்சில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாநகராட்சி சார்பில் திருட்டுத்தனமாக தண்ணீர் விற்பதை தடுக்க தண்ணீர் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் விநியோகித்து வரும் 34 லாரி மற்றும் 25 டிராக்டர்களில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்தியுள்ளது. இதனால் தண்ணீர் கொண்டு செல்லும் வாகனங்கள் எங்கு உள்ளது என துல்லியமாக அறிய முடியும். தண்ணீர் திருட்டையும் தடுக்க முடியும்.