2 மணிநேரத்தில் நிறைவேறிய கோரிக்கை.! கண்ணீரில் தத்தளித்த குடும்பத்திற்கு, இன்ப அதிர்ச்சியாக கையில் கிடைத்த ஆணை.!!
governtment job to dead village assistant's daughter
தமிழக சிவகங்கை மாவட்டதில் உள்ள தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற உதவி செய்ததால் வெட்டிக் கொல்லப்பட்ட கிராம உதவியாளரின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.
திருவேகம்பத்தூர் கிராம உதவியாளராக வேலை செய்து வந்த ராதாகிருஷ்ணன், கணேசன் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான நிலத்தை உரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மீட்க உதவியாக இருந்தார்.
இந்த சம்பவத்தினால் ராதாகிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் இருந்த கணேசன் அவரை திங்கட்கிழமை அன்று அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதை தொடர்ந்து கொலையாளி கணேசனை போலீசார் கைது செய்தார்கள். கொலை செய்யப்பட்ட ராதா கிருஷ்ணனின் மனைவி தனது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், கொல்லப்பட்ட ராதா கிருஷ்ணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அவரது இளைய மகள் தாரணிக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
English Summary
governtment job to dead village assistant's daughter