பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவி.!
Governor says Graduate students must serve not only their family but also the country
சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பங்கேற்றனர்.
அப்பொழுது அவர் பேசியதாவது, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியமிக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும்.
தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை.
கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.
மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன். பட்டம் பெற்றுள்ள மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
English Summary
Governor says Graduate students must serve not only their family but also the country