பேருந்து நிலையத்தில் தமிழக கவர்னர் செய்த செயல், அதிர்ச்சியில் மூழ்கிய பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

பின்னர் அவர் சிவகங்கைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த அவரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை மேற்கொண்டார்.

இதில் கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன், தலைமை கூடுதல் செயலாளர் ராஜகோபால், செந்தில்நாதன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

       

இதைத்தொடர்ந்து அவர் சிவகங்கையில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர்  இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் கவர்னர் நாளை அங்கு புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்களை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.  

பேருந்து நிலையத்தில் கவர்னர் தூய்மை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor cleaned bus stand in sivakangai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->