சூறைக்காற்றில் விமானமாய் மாறிய அரசுப்பேருந்து.! உள்ளிருந்த பயணிகள் பீதி.!  - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்ட  பேருந்து  நேற்று மதியம் ஒரு மணிக்கு  சுரண்டையை நோக்கி சென்று கொண்டேயிருந்தது. அந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு  இருந்தனர்.
 
சுரண்டைக்கு முன்னதாக அமைந்துள்ள குலையநேரி என்ற  குளம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் திடிரென்று அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்று வீச தொடங்கியது . இதன்காரணமாக  பஸ்சின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக பெயர்ந்து  தொங்கியது.  இதை அறிந்த பேருந்து  ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

bus issue,

 மேலும் பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்று பார்த்தனர். அப்போது பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பக்கவாட்டில் தொங்கிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த பேருந்தில் பயணம் செய்த  பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பயணிகளுக்கு இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்  பஸ்சில் இருந்து கீழே இறங்கிய டிரைவரும், கண்டக்டரும்  பெயர்ந்த மேற்கூரையை சரிசெய்தனர். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பேருந்து  சுரண்டையை நோக்கி சென்றது. இருப்பினும் பேருந்தில் இருந்த  பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus damage in sangarankovil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->