கூடலூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு.! 19 பேர் காயம்.!
Government bus accident in gudalur near
கூடலூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த பேருந்து கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது கூடலூர் அருகே எம்ஜிஆர் காலனி நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் சாலையின் ஓரத்தில் பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கூடலூரை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி பலத்த காயமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் 19 பேர் காயமடைந்த நிலையில் 5 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், 14 பேர் கம்பம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக கூடலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Government bus accident in gudalur near