இப்படியும் நகையை உங்களிடம் திருடலாம் உஷார்!! ஈரோட்டில் நடைபெற்ற நூதன திருட்டு!!
gold robbery in different ways
ஈரோட்டில் நூதன முறையில் திருட்டு நடைபெற்றுள்ளது. பரிசளிக்க நகையை கொண்டுவரசொல்லி, நகையுடன் மர்மநபர் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் பிரபல மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் பரிசாக தங்க நகையை பரிசளிக்க விரும்புவதாக கூறி நகைக்கடைக்கு போனில் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக நகைக்கடை ஊழியரிடம் 9 பவுன் நகையை கொடுத்தனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், 9 பவுன் நகையுடன் வந்த நகைக் கடை ஊழியரை ,வரவேற்ற அந்த நபர் மருத்துவமனையின் வரவேற்பரையில் அவரை அமர வைத்துவிட்டு, நகைகளை மருத்துவரிடம் காண்பித்து வருவதாக கூறி எடுத்து சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த ஊழியர் அவரை தேடவே, மர்ம நபர் 9 பவுன் நகையுடன் மருத்துவமனையின் பின் வாசல் வழியாக எஸ்கேப் ஆகி விட்டார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
gold robbery in different ways