உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து பலியான 17 ஆடுகள்..! - Seithipunal
Seithipunal


உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 17 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்துர் மாவட்டம், மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜலபதி. இவர் சொந்தமாக சுமார் 40 ஆடுகள் கொண்ட ஆட்டு மந்தை ஒன்றை வைத்துள்ளார். ஆடுகளை மேய்சலுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவதன்று, வழக்கம் போல ஆடுகளை மேய்சலுக்காக கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த வாட்உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் உயர் மின்னழுத்த கம்பி குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goats death in thiruppathur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->