குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும் கொடூரம்... வேதனையில் சிறுமிகள்.. பகிர் தகவல்..!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மிகவும் வேதனைக்குரிய விஷயமாக மாறிவரும் இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இது போன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

தமிழகத்தின், ஈரோடு மாவட்டத்தில் கஸ்பாபேட்டையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில் ஓட்டுனராக வேலை செய்து வரும் பசுபதி என்பவர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. மேலும் அங்கு இருக்கும் ஒரு சிறுமியை மட்டும் சென்ற ஒரு ஆண்டாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 

இதை தொடர்ந்து, இந்த தகவல் காப்பக நிர்வாகிக்கு தெரிய வந்தது, பின்னர் அவர் ஓட்டுநர் பசுபதி மீது போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, பசுபதி மீது வழக்குப் பதிவு செய்த ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் பசுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்கள். அதன் பின் பசுபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பெற்றார். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடமாக கொலை மிரட்டல் விடுத்து தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls sexualy abuse in child care institute


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->