திருமணமான மூன்றே நாளில் தாய் வீட்டிற்கு, விருந்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.!
girl suicide in vellore sakkaramangalam
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சக்கரமல்லூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் சீனிவாசனுக்கு திவ்யா என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னாளல் இவருக்கு சென்னை திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், நேற்று திவ்யா தன்னுடைய கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டு விருந்திற்கு வந்துள்ளார். அங்கு நன்றாக சாப்பிட்ட பின்னர் அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக பேசிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு அறைக்கு சென்றுள்ளார்.
ஓய்வெடுக்க சென்ற திவ்யா வெகு நேரமாகியும் திரும்பி வராத காரணத்தால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை தட்டி இருக்கின்றார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதன் காரணமாக பதறிப்போனவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கே அவர் சடலமாக தூக்கில் தொங்கி இருக்கின்றார்.
இதை கண்டவுடன் பெற்றோர் கதறி அழுது இருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 3 நாட்களிலேயே திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
girl suicide in vellore sakkaramangalam