ஆசையாக வளர்த்த நாய்காக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.!      - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்பத்தூர் அருகே, நாய் வளர்க்ககூடாது என்று தந்தை திட்டிய காரணத்தால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தின், பெரியநாயக்கன்பாளையத்துக்கு அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் 23 வயது மகள் கவிதா. இவர் தனியார் பத்திர அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். 

Image result for suicide seithipunal

இந்த நிலையில் கவிதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மின் விசிறியில் தூக்கிட்டு இறந்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் இவர் சீசர் என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்த நாய் குறைக்கும் சத்தம் தொல்லையாக இருப்பதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக அவரது தந்தை திட்டியதாக மனம் உடைந்த கவிதா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl suicide for her pet animal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->