அனுதினமும் சண்டையிட்ட மருமகள்.. மாமியார் எடுத்த விபரீத முடிவால் அரங்கேறிய சோகம்.!!
girl suicide due to her sons wife torture
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி நாங்கூர் கிராமத்தை சார்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அருமைக்கண்ணு. இவர்கள் இருவருக்கும் ராகவன், வீரமணி என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அரசின் முதியோர் உதவித்தொகை மூலமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கலியபெருமாள் இயற்கையை எய்தியுள்ளார்.
இதனையடுத்து தனது இரண்டாவது மகன் வீரமணியின் இல்லத்தில் அருமைக்கண்ணு வசித்து வந்த நிலையில், வீரமணியின் மனைவி கண்ணகிக்கும், அருமைக்கண்ணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை மகன் தட்டிக்கேட்கவில்லை என்று கூறி அரளிவிதையை அரைத்து குடித்து புளியமரத்தில் படுத்து கிடந்துள்ளார்.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அருமைக்கண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர் வீரமணிக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த வீரமணி தாயை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லாது இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், காவல் துறையினரிடம் வாக்குமூலமாக அருமைக்கண்ணு மரண வீடியோ கிடைத்துள்ளது.
இதுகுறித்த வாக்குமூலத்தில், தனக்கு இரண்டு மகன்கள் இருந்தும், அவர்கள் தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும், தன்னை அடிக்கடி மருமகள்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்து, இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் அரளிவிதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
girl suicide due to her sons wife torture