கணவனின் உடல்நிலை எண்ணி வருத்தப்பட்டு அரங்கேறிய துயரம்.. மனைவியை எண்ணி கணவனின் விபரீத முடிவு.!!
girl suicide due to her husband
தமிழகத்தின் சென்னையில் உள்ள மதுரவாயல் ஜானகி நகர் பகுதியை சார்ந்தவர் தாமஸ் (வயது 32). இவர் கார் ஓட்டுநராக இருந்து யாரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா என்கிற எஸ்தர் (வயது 27). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினத்தின் போது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்ல சவாரி வந்துள்ளதாகவும், ஊரடனு காலத்தில் சவாரிக்கு சென்று வந்தால் வருமானம் கிடைக்கலாம் என்றும் மனைவியிடம் கூறியுள்ளார்.
ஆனால் மனைவி தற்போது உள்ள சூழ்நிலையில் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறவே, வீட்டில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள தாமஸ் கூறியுள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த எஸ்தார் வீட்டில் இருக்கும் டீசலை எடுத்து தன மீது ஊற்றி தீக்குளித்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர், எஸ்தரை மருத்துவமனையில் அனுமதி செய்தனர். எஸ்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கம் தாழாது, தாமஸும் வீட்டின் கதவை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளளார். வீட்டு கதவை உடைத்து தாமஸை மீட்ட உறவினர்கள், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
girl suicide due to her husband