சிதம்பரத்தில் பல்கலை மாணவி மீது ஆசிட் வீச்சு! வீசியது யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவங்கள் ஒருகாலத்தில் அதிகமாகவே நடைபெற்று கொண்டிருந்தன. ஆனால் அண்மைக் காலமாக குறைந்திருந்த நிலையில் இன்று பல்கலை மாணவி ஒருவர் மீது சக மாணவரே ஆசிட் அடித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் மீது அவருடைய சக மாணவர் ஆசிட் வீசியதில், அந்த மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சுசித்ரா. இவர் மீது இவருடைய சக மாணவர் ஒருவர் ஆசிட் வீசியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிட்வீச்சினால் படுகாயம் அடைந்த மாணவி சுசித்ரா தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அண்மைக்காலமாக  ஆசிட் கலாச்சாரம் தமிழகத்தில் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl student acid attack by her classmate in chidambaram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->