சொந்த மகளை 5 மாத கர்ப்பமாக்கிய தாத்தாவும், அப்பாவும்.! சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்.!
Girl rapped by father in Tanjore
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிர் இழந்து இருக்கின்றார். அவருடைய இரண்டு இளைய மகள்களும் தங்களுடைய தாயின் சகோதரி வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மூத்த மகள் மட்டும் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இளங்கோவன் தன்னுடைய சொந்த மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றார். இதுகுறித்து, அக்கம்பக்கத்தினரிடம் அந்தப் பெண் தெரிவிக்க பின்னர் அவர்கள் சிறுமியின் தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், அந்த சிறுமியை அவருடைய தாத்தா மாரிமுத்துவும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் தாத்தா இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். சொந்த மகளை தந்தையும், தாத்தாவும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Girl rapped by father in Tanjore