விதவை பெண் கூட்டு பலாத்காரம்., துடிதுடித்து உயிரிழந்த கூட்டாளி.! விசாரணையில் பகீர்.!
GIRL RAPPED BY 5 PEOPLES IN NEYVELI
நெய்வேலி அருகே விதவைப் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தங்களுக்குள்ளாகவே தகராறு ஏற்பட்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி பகுதியை சேர்ந்த மாயாவதி என்ற பெண் கணவரை இழந்தவர். தன்னுடைய நண்பர் சுரேந்தர், என்பவருடன் மாயாவதி பைக்கில் நெய்வேலி பகுதியில் சென்றுள்ளார்.
அப்பொழுது இருவரையும் வழிமறித்த கும்பல் 5 பேர் கொண்ட ஆயுதத்தை காட்டி சுரேந்தரை அங்கிருந்து விரட்டி விட்டனர். பின்னர் மாயாவதியை அருகே இருந்த தோட்டத்திற்கு தூக்கிச் சென்று ஐந்து பேரும் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதன்காரணமாக மாயாவதி மயங்கியுள்ளார்.
பின்னர் அவரை ஊரில் கொண்டு விடுவது யார் என்பது குறித்து அவர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் என்ற நண்பரை மீதமிருந்த நால்வரும் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து மாயாவதி காவல் நிலையத்தில் புகாரளிக்க கொலையாளியான சதீஷ்குமார், கார்த்திக், ராஜதுரை, சிவபாலன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
GIRL RAPPED BY 5 PEOPLES IN NEYVELI