கிரிக்கெட் விளையாடுமிடத்தில், தொடர்ந்து வந்த துர்நாற்றம்.! ஓடிச்சென்ற சிறுவர்கள் கண்ட விபரீதக்காட்சி.!
Girl rape and killed in sathankulam
தூத்துக்குடி மாவட்டத்தில், சாத்தான்குளம் அருகே கல்விளை என்ற கிராமத்தின் ஓடை பாலத்திற்கு அருகே சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனால், அவர்கள் சந்தேகமடைந்து அப்பகுதிக்குச் சென்று பார்த்த பொழுது, மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர்.
அங்கிருந்த தண்ணீர் நிரப்பும் ட்ரம்மொன்றில் 9 வயது சிறுமி உதடு மற்றும் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து, உடனடியாக ஊருக்குள் சென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், சாத்தான்குளம் காவல்துறையினருக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமி கல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், 19 வயது இளைஞர்கள் இருவர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டு சிறுமியான இவர் டிவி பார்க்க வந்துள்ளார். அவர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சிறுமி இந்த பாலியல் சீண்டல் குறித்து வெளியில் கூறி விடுவார் என்று அவர்கள் பயந்து, அந்த சிறுமியை கொலை செய்து ஓடை பாலம் அருகே தூக்கி வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.
English Summary
Girl rape and killed in sathankulam