அக்காக்கு ஒருதலை காதல்... தங்கைக்கு நாடககாதல்.. கர்ப்பம்.. மரணம்... நாமக்கல்லில் அரங்கேறிய கொடூர கொலை.. பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவம்பட்டி பகுதியில் வசித்து வருபவரின் பெயர் பழனிச்சாமி. இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகளான மோனிஷா (வயது 19), அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாவது வருடம் பயின்று வருகிறார். 

பழனிச்சாமியின் இரண்டாவது மகள் (வயது 17), அங்குள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சனிக்கிழமையின் போது தாய், தந்தை பணிக்கு சென்ற நிலையில், ஊரடங்கின் காரணமாக அக்கா, தங்கை இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், நண்பகல் வேளையில் மோனிஷாவின் தங்கை திடீரென அலறி சத்தமிட்டு பதறியடித்துள்ளார். இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்கையில், சிறுமியின் கைகளில் இரத்தம் சொட்டிக்கொண்டு இருந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்ட சமயத்தில், தனக்கும், அக்காவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் கையை கிழித்துக்கொண்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து மோனிஷாவின் கைகளும் கிழிக்கப்பட்டு இரத்தம் சொட்டிய நிலையில், மூக்கில் இருந்து இரத்தம் வழிந்து மயங்கி இருந்துள்ளார். இருவரையும் அங்குள்ள நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அக்கம் பக்கத்தினர் அனுமதிக்கவே, பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். 

மருத்துவர்கள் இருவரையும் சோதனை செய்து மோனிஷா இறந்துவிட்டதாக தெரிவிக்க, உயிருடன் இருந்த 17 வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அக்கா தங்கையின் சண்டையில் இது நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை நம்பாத காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் ஊரை சார்ந்தவர் ராகுல் (வயது 19). இவன் மோனிஷாவுடன் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், கல்லூரிக்கு மோனிஷாவும், ராகுலும் ஒரே பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளனர். மேலும், மோனிஷாவிடம் ராகுல் காதல் செய்வதாக கூறி தொல்லை செய்து வந்துள்ளான். ராகுலின் நடவடிக்கை பிடிக்காத மோனிஷா காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த சமயத்தில், காமுகன் மோனிஷாவின் தங்கையை காதலுக்கு தூது செல்ல கூறி பேசி ஏமாற்றவே, ஒன்றும் அறியாத சிறுமியும் காதலுக்கு தூது சென்றுள்ளார். மோனிஷா அவனது நடத்தை குறித்து கூறி, நீ அவனுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்று கண்டிக்கவே, ராகுல் மோனிஷாவின் தங்கையை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளான். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், சிறுமி கர்ப்பமானதாக தெரியவந்த நிலையில், இந்த விஷயத்தை மோனிஷா அறிந்துள்ளார். இதனால் தங்கையை கண்டித்த நிலையில், இதனை தனது காதலனிடம் தெரிவித்து இருந்த நிலையில், உனது அக்காவை கொலை செய்துவிடலாமா? என்று ராகுல் கேட்டுள்ளான். இதனையடுத்து அக்காவை கொலை செய்ய திட்டமிட்ட தங்கையும், ராகுலும் சம்பவத்தன்று பெற்றோர்கள் பணிக்கு சென்ற நேரத்தில், அக்கா - தங்கை இல்லத்தில் இருந்துள்ளனர். 

ராகுல் திட்டப்படி இல்லத்திற்கு வரவே, ராகுலை கண்ட மோனிஷா சத்தமிட்டு, வெளியே செல்ல கூறி எச்சரித்துள்ளார். பின்னர் அங்கிருந்த கட்டிலில் அவர் அமரவே, கட்டிலில் இருந்த மோனிஷாவின் கால்களை ராகுல் பிடித்துக்கொள்ள, அக்காவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, கழுத்தை நெரித்து, பிளேடால் அறுத்து கொடூர கொலை அரங்கேறியுள்ளது. 

பின்னர் அக்கம் பக்கத்தினரை நம்பவைக்க நாடகம் ஆடியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அக்காவை காதலித்து, தங்கையை கர்ப்பமாக்கி கொடூர கொலை அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடகக்காதல் ஆடியுள்ள கோர முகம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சிறுமியை சிறுவர் சீர்திருத்தத்த பள்ளியிலும், ராகுலை கைது செய்து சிறையிலும் காவல் துறையினர் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl murder know about love and pregnancy in Namakkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->