சொல்ல சொல்ல கேட்காத மகள்.. போட்டுத்தள்ளிய தந்தை.. அதிர்ச்சியில் காவல்துறை.!!
girl murder by father
ஆண்டிபட்டியில் திருமணம் முடிந்த வாலிபரின் மீது மகள் காதல் வயப்பட்டு இருந்தால், தந்தையே மகளை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கோழிப்பண்ணை தெரு பகுதியை சார்ந்த பெண்மணி தவமணி. இதே பகுதியை சார்ந்தவர் பார்த்தீபன். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பார்த்தீபனிற்கும் - உறவுக்கார பெண்மணிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பார்த்தீபனிற்கு திருமணம் முடிந்தாலும், தவமணிக்கு திருமணம் முடியவில்லை. மேலும், தவமணி - பார்த்தீபனை திருமணம் செய்யும் நோக்கில் இருந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தவமணியின் தந்தை கண்டித்த நிலையில், மகள் சொல்வதை கேட்காமல் இருந்ததால் ஆத்திரத்தில் மகளை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த தவமணி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.