அந்த புகைப்படத்திற்காக, காதலனை கடத்தி அமெரிக்க காதலி செய்த காரியம்.! வெளியான பகீர் சம்பவம்!! - Seithipunal
Seithipunal


கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவில் வசித்து வருபவர் நபீப் அகமது. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வரும், செங்கல்பட்டுவை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் வாசவியை காதலித்து வந்துள்ளார்.

 இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த வாசவி நபீப் அகமதுவை 
சந்தித்துள்ளார்.மேலும் அவருடன் தியேட்டர், பார்க் மற்றும் ஹோட்டல் என சுற்றித்திரிந்துள்ளார்.அப்பொழுது இவர்கள் இருவரும் நெருக்கமாக பல புகைப்படங்களை எடுத்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வாசவி நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அழித்துவிடும்படி நபீப்பிடம் கேட்டுள்ளார் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணை நபீப் ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.

 இதனால் கோபமடைந்த காதலி இதுகுறித்து சென்னையில் வசித்து வந்த தனது நண்பர்கள் பாஸ்கரன், சரவணன் மற்றும் பாட்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் அவர்கள் நபீப்பிடம்  நைசாக பேசி அவனை அழைத்துச் சென்று புதர் ஒன்றில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.பின்னர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து நபீப் வீட்டிற்கு சென்று தனது தந்தையின் உதவியோடு இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஸ்கரனை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl kidnapped her lover


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->