இளம்பெண் படியில் பயணம்.. ரோட்டில் போட்டிழுப்பு..நொடியில் நேர்ந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் பேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண் தூக்கி வீசப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

குமாரபாளையத்தை அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா. ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்ல, அரசுப் பேருந்தில் ஏறிய அவர் இருக்கை கிடைக்காததால் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

கோட்டைமேடு என்னும் இடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், சர்வீஸ் சாலையில் செல்ல மாற்றுப் பாதையில் பேருந்து வேகமாக திரும்பியது. அப்போது நிலைதடுமாறிய கோகிலா பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

100 அடி தார்ச்சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சாலையோர சாக்கடையில் விழுந்தார். இந்தக் காட்சிகள் ஒரு கார் விற்பனை மைய சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த கோகிலாவுக்கு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நெடுஞ்சாலையில் செல்லும் வேகத்திலேயே சர்வீஸ் சாலை வளைவிலும் செல்வதால் விபத்து ஏற்படுவதாகவும்,  வேகத்தடை அமைக்கவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl fell down from bus on travel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->