அத்துமீறமுயன்ற ஆட்டோடிரைவர்.! தைரியமாய் சிறுமி செய்த காரியம்.. பாராட்டிய முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


சென்னை பெறவல்லூர் பெரியார் நகர் 1வது குறுக்கு தெருவில் 11 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அருகே வந்த ஆட்டோ சிறுமியை இடிப்பதுபோல வந்து நின்றது. இதனால், அந்த சிறுமி ஆத்திரமடைந்து அங்கிள் என்ன இப்படி வண்டி ஓட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். 

தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்த சிறுமி மீது ஆட்டோ டிரைவர் ஏதோ ஒரு திரவத்தை தெளித்துள்ளார். ஆனால், அது அவளின் துப்பட்டாவில் விழுந்துள்ளது. என்னவென்று சிறுமி சுதாரிப்பதற்குள் ஆட்டோ டிரைவர் சிறுமியை ஆட்டோவில் பிடித்து ஏற்ற இழுத்துள்ளார். 

சத்தம் போட்டும் பக்கத்தில் ஆள் இல்லாததால் சிறுமியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்ற முயற்சித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் தனியாக போராடிய சிறுமி டிரைவரின் கையை வேகமாக கடித்துள்ளார். 

இதனால், வலி தாங்க முடியாத டிரைவர் கையை விலக்கியுள்ளார். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய சிறுமி ஓடி வந்து தனது தாயிடம் நடந்ததை கூறியிருக்கின்றார்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு தெரியவந்துள்ளது, இந்த சம்பவமானது முதல்வரின் கவனத்திற்கும் வந்ததை தொடர்ந்து அவர் சிறுமியை பாராட்டி இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl escaped from auto driver who harassed the girl 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->