தம்பி கண்முன்னே அக்கா செய்த செயல்.! பதறி, துடித்து அரங்கேறிய பெரும் சோகம்.!
girl death in thuthukudi district
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன், பூரண செல்வி என்ற தம்பதியருக்கு 16 வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும், ஒரு மகனும் இறுகின்றனர். ஐஸ்வர்யா அதே பகுதியில் இருக்கும் அரசு உதவி பெரும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை எடுத்து இருக்கின்றார். மீண்டும் பள்ளிக்கு சென்ற பொது, அந்த பள்ளியின் கணினி ஆசிரியர் ஞானப்பிரகாசம் மாணவியை கண்டிக்க நினைத்து மாணவியை திட்டினார். மேலும், அனைவர் முன்பும் தோப்புக்கரணம் போட சொல்லி இருக்கின்றார்.
இதன் காரணமாக மனஉளைச்சளுக்கு ஆளான ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலையே இருந்துள்ளார். பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தேர்வுக்கும் செல்லாமல் பெண் வீட்டிலேயே இருப்பதை பார்த்த குடும்பத்தினர் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருக்கின்ற்னர். எனக்கு பள்ளிக்கும் போக பிடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்து இருக்கின்றார்.
இந்த நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா தம்பி பார்த்துவிட்டு அலறி துடித்து கதறி அழுதுள்ளார்.
பின்னர் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ஐஸ்வர்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இறுகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
English Summary
girl death in thuthukudi district