துரத்திய பாம்பு., தப்பிய பெண்..! வேறு வடிவில் வந்த எமன்.! காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாம்பை கண்டதும் பயந்து நடுங்கி ஓடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிப்பட்டு அருகே ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற இளம்பெண் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் பின்புறம் நடந்து சென்று இருக்கின்றார். அப்போது சங்கீதாவிற்கு அருகில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனை பார்த்ததும் சங்கீதா அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த சங்கீதாவின் தாயார் ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து சங்கீதாவை மீட்க உதவி கேட்டார்.

அவர்களும் உடனடியாக கிணற்றில் இறங்கி சங்கீதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl death in thiruvallur mavattam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->