இரவு முழுதும் புதுபோனில் மகள் செய்த காரியம்.! கண்டுகொண்ட தந்தை., மகள் செய்த விபரீதம்.!
girl death in salem
சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு அருகே கோவிந்தன் என்பவர் தன்னுடைய மனைவி, மகன், மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். அவருடைய மகள் கல்லூரி மாணவி.
அவருக்கு புதிதாக ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றை தந்தை வாங்கி கொடுத்து இருந்தார். இவர் தினமும் பேஸ்புக்கில் தன்னுடைய தோழிகளுடன் நீண்ட நேரம் சேட் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் தந்தை கோவிந்தன் கண்டித்து இருக்கின்றார். சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் மனவேதனை அடைந்த அந்த பெண் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
கோபத்தில் சென்று அறையில் தூங்கி விட்டதாக பெற்றோர் நினைத்திருந்தனர். ஆனால், காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் தாழ்ப்பாலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்களுடைய ஆசை மகள் அங்கே பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.