திருப்பத்தூர் || மழையால் இடிந்து விழுந்த சுவர்.. பரிதாபமாய் பலியான 3 வயது சிறுமி..! - Seithipunal
Seithipunal


வீட்டின் மேல்சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், சோமலாபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். கட்டுமான மேஸ்திரியான இவருக்கு வாணி என்ற மனைவியும்  வர்ஷினி (3) மற்றும் ஒரு வயதில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேறறு முழுவதும் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், சுரேந்தரின் வீட்டு மழையால் வலுவிழந்தது.

இதனால், வீட்டின் மேல்பக்க சுவர் இடிந்து அங்கு விளையாடி கொண்டிருந்த வர்ஷினி மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழ்ககுபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ, அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl Death After Falling wall


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->