தாலிகட்டிய கணவனிடம் கண்ணீர் அழுகை.. மனம்திருந்தியும் 6 பேருக்கு பெரிய ஆப்பு..!! குமரியில் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள கல்லூரியில் முதல் வருடம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தினமும் கல்லூரி சென்று வந்த சமயத்தில், சாலையோரம் கடை வைத்திருந்த சதீஷ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியும், சதீசும் காதலித்து வந்ததை அடுத்து, இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. 

மேலும், ஊரடங்கு சமயத்தில் காதலனுடன் தொலைபேசியில் பேசி வந்ததை அறிந்த பெற்றோர்கள், மகளுக்கு அவசர அவசரமாக திருமணம் பேசி முடித்துள்ளனர். இரண்டு வீட்டார் சம்மதத்துடன் சத்தமே இல்லாமல் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் இரவன்று கணவரிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தான் மற்றொரு நபரை காதலிக்கிறேன் என்றும், பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டதாகவும் அழுது புலம்பியுள்ளார். 

இதனையடுத்து மனம் மாறிய தாலி கட்டிய கணவன் விவேக் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெளியே சொல்லாமல் அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளார். விவேக் அங்கிருந்து சென்றதும், சிறுமி காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். எந்த விஷயமும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்த காதலன் கையும் களவுமாக சிறுமியின் தந்தையிடம் சிக்கியுள்ளார். 

பின்னர் இது குறித்து விசாரிக்கவே, தங்கள் மகளை வைத்து தான் நான் வந்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து காதலனை உறவினர்கள் நையப்புடைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தனது காதலனை காப்பாற்றுவதாக நினைத்து, " தனக்கு 17 வயது ஆகிறது... தன்னுடைய விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் வற்புறுத்தலின் பேரில் தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. 

இந்த புகாரை ஏற்க காவல்துறையினர் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் விவேக்கின் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணையில் மாணவிக்கு 17 வயது மட்டுமே ஆகும் நிலையில், திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாய் - தந்தை, தாலி கட்டி சிறுமியின் விருப்பமில்லை என்ற தகவல் அறிந்து விட்டு சென்ற கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது சிறுமியின் மனதில் ஆசை காட்டிய காதலன் சதீஷின் மீதும் போக்ஸோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை அறிந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் மாமனார் மாமியார் சம்பவத்தில் இருந்து தப்பிச் செல்லவே, தன்னை எப்படியாவது காதலியுடன் அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று எண்ணிய சதீஷ் காவல் நிலையத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl compaint parents, love boy and husband family in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->