வீட்டு வேலை செய்யவில்லை என தாய் திட்டியதால்., சிறுமி எடுத்த விபரீத முடிவு..!!
Girl Committed suicide near Peramballur
தாய் திட்டியதால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேள்விமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் தளபதி. இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் தர்ஷினி(15) என்ற 15 வயது மகளும் உள்ளனர்.
வீட்டு வேலை செய்யாததால் அவரின் தாய் தர்ஷினிடை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தர்ஷினி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்ரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Girl Committed suicide near Peramballur