திருமணமான ஒரு வருடத்திலேயே இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.! சிக்கிய கடிதத்தால் துடிதுடித்துபோன குடும்பத்தினர்!!
girl commits suicide for husband torture
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெள்ளக்கல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வீரபத்திரன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இவருக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வீரபத்திரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சங்கீதாவுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வா என்று அடிக்கடி கேட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார். இவ்வாறு நேற்று முன்தினமும் வீரபத்திரன் குடித்துவிட்டு வந்து சங்கீதாவுடன் வாக்குவாதம் செய்து பெரும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று சங்கீதா வீரபத்திரருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரபத்திரன் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சங்கீதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் வீரபத்திரன் மீது சந்தேகமாக இருப்பதாகவும் சங்கீதாவின் குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இறப்பதற்கு முன் சங்கீதா எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அக்கடிதத்தில் எனது கணவர் குடித்தால்தான் இவ்வாறு செய்தேன். என் கணவர்தான் இதற்கெல்லாம் காரணம் என அவரது முகவரி மற்றும் நகை மொத்தமும் கணவர் வீட்டில் தான் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
girl commits suicide for husband torture