காதலியுடன் கண்டபடி உல்லாசம்.! கடைசியில் கழட்டிவிட்டு ஓட்டம், அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்.!
girl cheated by her boy friend in villupuram
விழுப்புரம் அரகண்டநல்லூர் அருகே வசந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு அன்பரசி என்ற மக்கள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவருடன் நட்பு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
நாளடைவில் இருவருக்கும் காதல் அதிகமாகி உடலளவில் நெருக்கமாகி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் விஸ்வநாதனுக்கு ஒரு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அன்பரசிக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்பரசி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், காவல்துறை இதுகுறித்தது எந்த வித ஆதாரத்தையும் அன்பரசிக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய காதலன் கிடைக்காத மன அழுத்தத்தில் இருந்த அன்பரசி விஷம் அருந்தி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கின்றார்.
இந்நிலையில், காதல் என்ற பெயரில் பெண்ணை அனுபவித்துவிட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த விஸ்வநாதனுக்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசி "காதலன் எங்கே.?" என எழுதப்பட்ட பலகையுடன் விஸ்வநாதன் வீட்டின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
English Summary
girl cheated by her boy friend in villupuram