இளம்பெண் குளிக்கையில் ஆபாச படம்.. ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்த காமுக சகோதரர்கள்..!! - Seithipunal
Seithipunal


நயினார் குப்பத்தில் இளம்பெண் குளிக்கும் போது ஆபாச படம் எடுத்து மிரட்டி, தனது ஆசைக்கு இணங்காத பெண்மணியை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. 

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு செய்யூர் நயினார்குப்பம் பகுதியை சார்ந்த இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இதே பகுதியை சார்ந்த சகோதரர்களான தேவேந்திரன் மற்றும் புருசோத்தமனின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  

இவர்கள் இருவரையும் சந்தேக வளையத்தின் கீழ் கொண்டு வந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண்ணின் கொலை தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று பெண்மணி குளிக்கும் போது காமுக சகோதரர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். 

பெண்மணியும், இவர்களின் குடும்பத்தினரும் உறவினர்கள் என்பதால், பெண்மணியின் இல்லத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சென்று இருவரும் விடியோவை காண்பித்து, தங்களின் இச்சைக்கு இணங்க கூறியுள்ளனர். 

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்மணியை வீட்டில் வைத்து அடுத்து கொலை செய்து, தூக்கில் பிணமாக தொங்கவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl bath video captured by culprits and sexual torture murder police arrest culprit Brothers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->