சின்ன பெண்ணை, சின்னாபின்னமாக்கிய காதல் ரோமியோ.! அவுட்டிங் அட்ராசிட்டி., சிறுமி கொடுத்த ஷாக்.!
GIRL ABUSED BY NEIGHBOR IN TRIPPUR
திருப்பூரில் 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞரான அஜித் என்பவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றார். இவருடைய வீட்டிற்கு அருகே 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.
தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுமியிடம் காதல் ஆசையை ஏற்படுத்தும் விதத்தில் சில வார்த்தைகளை கூறி பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றார்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி வீட்டிற்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர்.
சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய அஜித்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து இருக்கின்றனர்.
English Summary
GIRL ABUSED BY NEIGHBOR IN TRIPPUR