மது வாங்கி கொடுத்து மகளை பாலியல் பலாத்காரம்.! கன்னியாகுமரியில் கொடூரம்.!
GIRL ABUSED BY FATHER FRIEND
தந்தைக்கு மதுவாங்கிக்கொடுத்து கன்னியாகுமரியில் அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 45 வயதான மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய ஜீன் என்பவருடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர். இருவரும் வேலை முடித்துவிட்டு மது அருந்துவது வழக்கம். அதுபோல கடந்த 31ஆம் தேதி ஆரோக்கிய ஜீன், மது வாங்கிக்கொண்டு, தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்று இருக்கின்றார்.
அங்கே இருவரும் மது அருந்தி இருக்கின்றனர். அப்பொழுது, வீட்டிற்குள் நண்பரின் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மனைவியும், அவருடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோர் இருக்க இருவரும் மது அருந்தியதில் ஆரோக்கிய ஜீன் மதுவை ஊற்றிக்கொடுத்து நண்பரை நிலைகுலைய செய்து இருக்கின்றார்.
அதன்பின்னர், அவருடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றார். நண்பரின் மனைவி வாய்பேச முடியாததால் யாரையும் கூப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார். தன் மகள் தன்னுடைய கண் முன்னே சீரழிவதை பார்த்து வேதனையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டார்.
அதன் பின்னர் அந்த மகளின் தந்தை காலை போதை தெளிந்தவுடன் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கேள்விப்பட்டு அதிர்ந்து போனார். பின்னர் போலீசாரிடம் பகாரளிக்க போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
English Summary
GIRL ABUSED BY FATHER FRIEND