ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, குடும்பத்தினர் அவரை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணம் குறித்து ஜெம் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முன்னாள்‌ முதல்வர்‌ மற்றும்‌ அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்களின்‌ மனைவியார்‌ விஜயலட்சுமி (66) அவர்கள்‌ உடல்நலக்குறைவால்‌ சென்னை ஜெம்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு கடந்த பத்துத்தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்‌. உடல்நலமடைந்து, மருத்துவமனையிலிருந்து இன்று வீடு இரும்ப இருந்தார்‌. 

இந்நிலையில்‌, இன்று அதிகாலை 5:00 மணியளவில்‌ தீவிர மாரடைப்புக்குள்ளானார்‌. உடனடியாக இதயநோய்‌ நிபணர்கள்‌, தீவிரசிகிச்சை நிபுணர்கள்‌ தக்கச்‌சிகிச்சையளித்தும்‌ பயனின்றி காலை 6:45 மணியளவில்‌ இயற்கையெய்தினர் என்பதை வருத்தத்துடன்‌ தெரிவித்துக்கொள்குறோம்‌ என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gem hospital statement for ops wife death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->